Saturday, June 19, 2010

மிளகாய் துவையல்

தக்காளி பெரிதாக ஒன்று,
ஒரு கப் தோலுரித்த சின்ன வெங்காயம்,
தோலுரித்த வெள்ளைப்பூண்டுபல் இரண்டு,
ஆறு காய்ந்த மிளகாய்,
நெல்லிக்காய் அளவு புளி,
உப்பு தேவைக்கேற்ப.

எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக்
கொண்டு,தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து
மூன்று தேக்கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும்
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கடுகு அரைத்
தேக்கரண்டி போட்டுத்தாளித்து சிறிது கறிவேப்பிலை
சேர்த்து சூட்டுடன் துவையலில் ஊற்றி கலந்து
கொள்ளவேண்டும்.

பி கு: வெள்ளைப்பூண்டு பிடிக்காதவர்கள் அது
இல்லாமலும் துவையல் செய்யலாம்.

பத்து காய்ந்தமிளகாய் வரை சேர்க்கலாம்.காரமாக
இருந்தால் துவையலின் சுவை கூடும். அவரவர்
ருசிக்கேற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் சுடு தண்ணீரில்
ஊறவைத்து அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.
காரம் இருக்காது.

இந்த துவையல் வெள்ளைப்பணியாரத்திற்கு
மட்டுமல்ல இட்லி,தோசைக்கும்கூட நன்றாக
இருக்கும்!

-மீனா

Sunday, June 13, 2010

வெள்ளைப் பணியாரம்



பச்சரிசி இரண்டு கப் , உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
(நிறைய),பால் ஒரு டீஸ்பூன், சர்க்கரை அரை டீஸ்பூன்,
உப்பு கொஞ்சம்,தேவையான அளவு எண்ணெய்.

அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாகப்போட்டு ஒரு
மணி நேரம் ஊறியபின் உப்பு சேர்த்து (இட்லி மாவு
பக்குவத்தில்) நன்கு வெண்ணை போல் அரைத்து
எடுத்து, பிறகு உரலை(கிரைண்டரை) சிறிது தண்ணீர்
ஊற்றி கழுவி அந்த தண்ணீரை தனியாக எடுத்து
வைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவுடன் சர்க்கரை,
பால், கழுவிய தண்ணீர் சேர்த்து (இப்போது) தோசை
மாவு பதத்தில் நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

ஒரு ஏந்தலான (நான்ஸ்டிக்பேன்) சட்டியை அடுப்பில்
வைத்து பணியாரம் வேகவைப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து
எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை
எடுத்து எண்ணையில் ஊற்றிய பின்பு அரிகரண்டி
யினால் (வெந்து கொண்டிருக்கும் பணியாரத்தின்
மேல் கரண்டி பட்டுவிடாமல்) சுற்றிலும் உள்ள
எண்ணெயை பணியாரத்தின்மேல் எடுத்து உற்றவும்,
பணியாரம் உப்பி மேலெழும்பியதும் மறுபுறம்
திருப்பி விட்டு உடனே எடுத்து விட வேண்டும்.
(அதிகம் வெந்தால் கோல்டன் பணியாரமாக மாறி
விடும்)

இந்த வெள்ளைப் பணியாரத்துடன் தொட்டுக்கொள்ள
சீனி அல்லது மிளகாய்த்துவையல் சேர்த்து சாப்பிட்டால்
அதன் சுவையே அலாதிதான்!

-மீனா

Thursday, June 3, 2010

முந்திரி கேக்

1 கப் முந்திரிபருப்பு,
1 கப் கடலை மாவு,
2 கப் தண்ணீர்
2 கப் சக்கரை,
1 கப் நெய்,
2¼ கப் பால்

முந்திரிப்பருப்பை பாலில் ஊறப்போட்டு நன்றாக
ஊறியபின் அரைத்துவைத்துக்கொண்டு, சர்க்கரையை
தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும்
அரைத்துவைத்துள்ள முந்திரி விழுது,கடலைமாவு
இவைகளை சர்க்கரை பாகில் போட்டு சிறிது சிறிதாக
நெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு
வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய
தட்டில் கொட்டி சமப்படுத்தி சிறிது ஆறியதும் துண்டம்
போடலாம்.

பிகு: இதையே கடலைமாவிற்கு பதில் பால்கோவா
½ கப் சேர்த்தும் செய்யலாம்.

-மீனா