Thursday, April 1, 2010

இட்லி செய்முறை 3

பச்சரிசி - 1 அளவு
புழுங்கலரிசி - 4 அளவு
வெந்தயம் - 1/8 அளவு

மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி
நேரமாவது ஊற வைக்கவும்.தோலில்லாத முழு உழுந்து -
1 1/2 அளவு நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம்
ஊற வைக்கவும்.தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும்.

முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும்.
நன்றாக பொங்கி வர வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக
நீர் சேர்க்க வேண்டும்.மாவை எடுத்து விட்டு, அரிசியை
அறைக்கலாம். நிறைய தண்ணீர் விட வேண்டாம்.
கொஞ்சம் ரவையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.
தேவையான உப்பைப் போட்டு ஒரு 5 நிமிடங்கள்
அறைக்கலாம். நன்றாக சேர்ந்து கொள்ளும்.

நன்றாக எல்லவற்றையும் கலந்து,குளிர்சாதன பெட்டியில்
வைக்கலாம். உபயோக்க 8-6 மணி நேரத்துக்கு முன்
வெளியில் வைக்க வேண்டும். நன்றாக பூத்து வரும்.
இட்லி வார்ப்பதற்கு முன், தேவையான தண்ணீர் விட வேண்டும்.
கரண்டியில் விட்டுப் பார்த்தால், சுலபமாக விழ வேண்டும்.
இது மிக முக்கியம். தோசையானால், தண்ணீர் இன்னம்
சேர்க்க வேண்டும்

- ஸ்வர்ணலக்ஷ்மி

No comments:

Post a Comment