Friday, April 2, 2010

சுலபமான ஆப்பம் செய்முறை

5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி மாவு 3 கப்
தேங்காய்ப்பூ 1/2 மூடி
சாதம் 2 மேஜைக்கரண்டி
தேங்காய் தண்ணீர் 1 கப்
தயிர் 1/2 கப்
சோடா 1/4 தேக்கரண்டி
சீனி 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

சோடாவை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து
அரைத்து எடுத்து அப்படியே இரவு முழுதும் வைத்து,
அடுத்த நாள் ஆப்பம் சுடுவதற்கு அரைமணி நேரம்
முன் கால் தேக்கரண்டி சோடாவையும்,சிறிதளவு
சீனியும் அரைத்து வைத்திருக்கும் மாவில் கலந்து
ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு
சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை
குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்
துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன்
என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டி மாவை
அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து(கை
சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்)மாவு சட்டியின்
எல்லா பக்கமும் வருகிறார்ப்போல் மெதுவாக சுற்றி
மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்க
வேண்டும்.

(இது தேங்காய்ப்பால் இல்லாமலும் சாப்பிடலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~

-மீனா

No comments:

Post a Comment