Friday, April 2, 2010

செளசெள மோர்க்கூட்டு

செளசெள என்னும் பங்களூர் கத்திரிக்காய் மோர்க்கூட்டு

தேவையான பொருட்கள் :

காரம் தேவையான அளவு பச்சை மிளகாய்,கொஞ்சம்
சீரகம்,உப்பு,துருவிய தேங்காய்,பெருங்காயம், உளுத்தம்
பருப்பு, கருவேப்பிலை

செய்யும் வகை :

பச்சைமிளகாயையும்,சீரகத்தையும்,தேங்காயத்
துருவலையும் கொஞ்சம் உப்பு போட்டு மிக்ஸியில்
அரைத்து கொள்ளவும் அந்த விழுதை எடுத்து
வைத்துக்கொண்டு சீராக நறுக்கப்பட்ட சௌசௌ
எனப்படும் பங்களூர்க் கத்திரிக்காயை சற்றே
குறைவாக தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
அரைவேக்காடு போதும்

இப்போது அந்த சௌ சௌவுடன் அரைத்து
வைத்த விழுதை போட்டு நன்றாகக் கொதிக்க
விடவும் இரண்டும் கலந்து நன்றாக ஓரளவு
சௌசௌ காய்கள் தனியாக இருக்குமாறு வேக
வைத்தால் போதும் அதிகமாக வேக வைத்தால்
குழைந்துவிடும்

கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு பெருங்காயம்
கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தனியே
வைத்துக்கொள்ளவும்.இப்போது அடுப்பில் இருக்கும்
சௌசௌ கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை
எடுத்து கீழே இறக்கி வைத்துவிட்டு வேண்டிய அளவு
தயிரை எடுத்து அதிக நீர் சேர்க்காமல் மிக்ஸியின்
சிறிய பாத்திரத்தில் இட்டு ஒருமுறை சுழற்றினால்
கெட்டியான மோர்க்கலவை கிடைக்கும் அந்த மோர்க்
கலவையை சௌசௌ இருக்கும் பாத்திரத்தில் இட்டு
நன்றாகக் கலக்கவும்

தாளித்து வைத்திருக்கும் கடுகு,உளுத்தம்பருப்பு
பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றைப்
போட்டு இறக்கவும். இப்போது பெங்களூர் கத்திரிக்காய்
மோர்க்கூட்டு தயார்

தமிழ்த்தேனீ

No comments:

Post a Comment